சென்னை: சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
அவர் கோயம்பேட்டில் உள்ள கார் விற்பனையகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் ரீட்டா ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.
ரீட்டாவின் கணவர் லேன்சன் டோயோட்டோ ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.