டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை மாநகர்

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதயொட்டி ஞாயிற்றுக்கிழமை நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:32 pm

DIN

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதயொட்டி ஞாயிற்றுக்கிழமை நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 23 முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தோற்று அதிகரித்துவரும் மதுரை , கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது. ஊரடங்கு உத்தரவையொட்டி மருத்துவமனைகள் மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

Story image

இதையடுத்து மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் எதுவும் இன்றி மயான அமைதியுடன் காணப்பட்டது. மேலும் நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவை ஒட்டி அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மருந்து விநியோகம், பால் வினியோகம், உணவு விநியோகம் ஆகிய வாகன நடமாட்டம் மட்டுமே இருந்தது. 

Story image

மேலும் நகரின் உள்பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் தெருக்களிலும் வாகன போக்குவரத்து, ஜன நடமாட்டம் எதுவும் இல்லை. சாலைகளில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சி வாகனங்கள் காவல்துறையினரின் நடமாட்டம் மட்டுமே இருந்து வந்தது. எப்போதும் வாகன போக்குவரத்து ஜன நடமாட்டம் ஆகியவற்றுடன் காணப்படும் மதுரை மாநகர் ஜனநடமாட்டம் வாகனங்கள் எதுவும் இன்றி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது வித்தியாசமான காட்சியாக அமைந்திருந்தது. 

Story image

மேலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முழு ஊரடங்கு புதன்கிழமை இரவு 9 மணி வரை அமலில் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.