தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை ஈரோடு மாவட்டத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈரோடு மாவட்டத்தில் 200 மசூதிகள், 32 ஈத்கா மைதானங்களில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஈத்கா மைதானங்கள் ஏதும் அமைக்கப்பட வில்லை. மசூதிகளும் திறக்கப்படவில்லை.
இதன்காரணமாக முஸ்லிம்கள் அவர்களது வீடுகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகை செய்து, புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ந்தனர். பக்ரீத் பண்டிகையன்று குருபானி பொது இடங்களில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், வதை கூடங்களில் மட்டுமே ஆடுகளை வெட்டி, பிரித்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், ஊரகப்பகுதிகளில் மசூதிகளில் தொழுகை நடத்திக்கொள்ள அனுமதி உள்ளதால், அங்கு பொதுமக்களான இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மாறாக மசூதி நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் மட்டுமே தொழுகை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அங்கும், சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுகின்றனரா? என போலீசார் கண்காணித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


