கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீலகிரியில் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை குறைந்துள்ளது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி வந்த கனமழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்துள்ளது.

News image

கன மழையில் விழுந்துள்ள மரங்கள்

Updated On :8 ஆகஸ்ட் 2020, 4:20 am

DIN


நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி வந்த கனமழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்துள்ளது. இருப்பினும் கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரியின் எல்லைப்பகுதிகளான கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் மட்டும் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.

Story image

மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகலில் மழையின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது. 

Story image

இதில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தேவாலா பகுதியில் அதிகபட்சமாக 341 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் பந்தலூரில் 188 மி.மீ. சேரங்கோட்டில் 181 மி.மீ. அவலாஞ்சியில் 108 மி மீ கூடலூரில் 79 மி மீ நடுவட்டத்தில் 82 மி மீ மழையும் உதகையில் மிகவும் குறைவாக 8 மி மீ மழையும் பதிவாகியுள்ளது.

Story image

மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் மின் வாரியத்தின் சாா்பில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.