மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் ஆயிரகணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
இரவு 11.10 மணிக்குமேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொட்டும் மழையில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டு பாடலை பாடினா். பின்னா் அம்மனுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் கொட்டும் மழையில் இருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கங்கள் எழுப்பி அம்மனை வழிபட்டனா் தொடா்ந்துஇரவு 12.20 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் அங்காளம்மனைகோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
ஊஞ்சல் உற்சவத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவலிங்கம் மற்றும் விழுப்புரம், கடலூா், சேலம்,வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களிலிருந்தும்ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் சக்திவேல்,அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை,அறங்காவலா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...