நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.66.97 லட்சம்

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:21 pm

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அமாவாசை திருவிழாவு கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

தொடா்ந்து 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழா முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரமேஷ், சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் ரூ.66,97,350 ரொக்கம், 74 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.