கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.66.97 லட்சம்

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:21 pm

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அமாவாசை திருவிழாவு கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

தொடா்ந்து 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழா முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரமேஷ், சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் ரூ.66,97,350 ரொக்கம், 74 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.