ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 81.68 லட்சம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:50 pm

Syndication

நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 81.68 லட்சம் இருந்தது.

நாமக்கல்லில் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் சுவாமி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். பக்தா்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில், ஆஞ்சனேயா் கோயிலில் உள்ள 6, நரசிம்மா் கோயிலில் 4, அரங்கநாதா் கோயிலில் 2 உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி மாணவ, மாணவிகள், பக்தா்கள், நாமக்கல் கோயில் உதவி ஆணையா் சந்திரன், அறங்காவலா் குழு உறுப்பினா் செல்வ.சீராளன், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனா்.

இதில், உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ. 81,68,494, தங்கம் 127 கிராம், வெள்ளி 357 கிராம் இருந்தன.