பிரதமர் மோடி வேளாண் பெருமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு, உற்பத்தி செய்யப்படுகின்ற அதிகமான காய்கறிகள், பழங்கள், தானியங்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளில் வைக்க வேண்டும், மேலும் காய்கறி, பழங்கள் அதிகமாக விளைகின்றபோது விலை வீழ்ச்சியாகிறது. வீழ்ச்சி அடைகின்ற அந்த காலக்கட்டத்தில், அவைகளை பாதுகாத்து விலை ஏறுகின்ற போது அதை விற்பனை செய்தால் விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை பெறுவார்கள். அதற்காக வேளாண் பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசால் திட்டம் வகுக்கப்படும் என்ற அறிவிப்பை தந்திருக்கின்றார்கள். அதன் மூலமாக, 2 கோடி ரூபாய் வரை, 3 சதவீத வட்டியில் மத்திய அரசு கடன் தருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இன்றும், அந்தத் திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்திருக்கின்றார். இதனால் கிராமப்புறங்களில் இருக்கின்ற விவசாயிப் பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள், எதிர்காலத்தில் வீணாகாமல் பாதுகாக்கப்படும். அதேபோல, தக்காளி அதிமாக விளைகின்றபொழுது விலை வீழ்ச்சி அடைகிறது. அதனால், நவீன முறையில் தக்காளி ஜுஸ் செய்கின்ற நடமாடும் வாகனத்தை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறோம்.