மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கரோனா காலத்தில் ஜோதி நகர் அரசுப் பள்ளி வளாகத்தில் தோட்டவேலை செய்த பள்ளி ஆசிரியர்கள்

கரோனா காலத்தில் ஜோதி நகர் அரசுப் பள்ளி வளாகத்தில் தோட்டவேலை செய்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஊர் பொது மக்களும் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டதோடு,

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 12:56 pm IST


கரோனா காலத்தில் ஜோதி நகர் அரசுப் பள்ளி வளாகத்தில் தோட்டவேலை செய்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஊர் பொது மக்களும் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டதோடு, இந்த கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாகச் சேர்வதற்கும் இச் செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.

Story image

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒருவார காலமாக மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம் சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தினமும் தமது சுய விருப்பத்துடனும், பள்ளியின் எதிர்காக வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பள்ளிக்குச் சென்று தமது பள்ளியில் புதிதாக பல்வகை மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம், அழகுச் செடிகள் தோட்டம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு எனப் பல்வேறு வகையான பள்ளிப் பணிகளை மாணவர்கள் உள்ளிட்ட எவரின் துணையும் இன்றி ஆசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். 

Story image

இதில் பல்வகை அழகிய தொட்டிகளில் செடிகளை வைத்தும், பள்ளி வளாகத்தில் உள்ள கடினமான நிலத்தைத் தோண்டி அதில் செடிகள் வைப்பது என பல்வேறு பணிகளை விருப்பத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தி. வெங்கடேசன் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில் ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் பள்ளி வளாகம் முழுமையும் சுத்தம் செய்தனர்.

இதை கண்ட பெற்றோர்களும், ஊர் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டதோடு இக்கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாகச் சேர்வதற்கும் இச் செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.