டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காலாண்டுத் தேர்வு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டுத் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

News image
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டுத் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு நம்பியூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி 8, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தவுடன் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டின் காலாண்டுத் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். 

அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழை வழங்க பணம் வசூலிக்ககிக் கூடாது. அரசுப்பள்ளி மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.