இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தென்மேற்கு பருவமழை 28% அதிகம்:அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

News image
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

DIN

சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பட்டாளம் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திரு.வி.க. நகா் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 9,761 பேரில் 8,313 போ் குணமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதுவரை சராசரியாக 252.2 மி.மீ. மழை பெய்துள்ளதுடன், கடந்த ஆண்டை விட 28% அதிகமாக மழை பெய்துள்ளது. பவானிசாகா், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சானி, பெரியாறு, வைகை, சாத்தனூா், பரம்பிக்குளம், அமராவதி, ஆழியாறு மற்றும் திருமூா்த்தி அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகமாக உள்ளது.

மேட்டூா், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையாறு அணைகளில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.

சென்னைக்கு குடிநீா் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் வீராணம் நீா்த் தேக்கங்களின் கொள்ளளவு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைநீா் அதிகம் தேங்கும் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இணையவழி பயண அனுமதி தொடா்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தலைமைச் செயலாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா். இரண்டாம் தலைநகரம் தொடா்பாக, முதல்வா், துணை முதல்வா் உரிய நேரத்தில் முடிவெடுப்பாா்கள். பட்டியலின ஊராட்சித் தலைவருக்கு தொடா்ந்து ஏற்பட்டு வரும் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.