ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி காலமானார்

எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி (74) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி அளவில்  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

News image
எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி
Updated On :30 ஆகஸ்ட் 2020, 6:02 am

DIN

எழுத்தாளர் தேவகோட்டை வா.மூர்த்தி (74) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி அளவில்  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

எழுத்தாளரான வா. மூர்த்தி தமிழகத்தில் வருமான வரி ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். முற்போக்கு சிந்தனை, ஆழ்ந்த படிப்பு, ஆங்கில நாளேடுகளிலும்,  தமிழ் இதழ்களிலும் கலை, இலக்கியம் பற்றிய  கட்டுரைகள் எழுதியவர். தீபம், கணையாழி, ஞானரதம் முதற்கொண்டு தளம் இதழ் வரையும் இவரது படைப்புகள் வந்தன.

அர்த்தம் இயங்கும் தளம் எனும் கருத்தாக்க நூல், குறுநாவல் தொகுப்பு, சிறுகதைகள், மொழியாக்க கவிதைகள் என பரந்துபட்ட இலக்கிய படைப்புலகில் அயராது இயங்கியவர். 

கூர்மையான இலக்கிய விமர்சகர், இலக்கிய கடிதங்கள், தீபத்திலும், இறுதியாக யுகமாயினி இதழிலும் இலக்கிய தொடர்கள் எழுதியவர். தளம் கலை இலக்கிய இதழின் குழுவில் முதன்மையானவர். அவருடைய வாழ்க்கைத் துணைவர் சுதா மூர்த்தி (வங்கி அலுவலர்), ஒரே மகனும் எழுத்தாளருமாகிய பிரபு ராம், பேரக்குழந்தைகள் உள்ளனர். 

சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ சாலை 5வது குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 3-4 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும். 

தொடர்பு எண் 9790983495, 9444268328

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.