கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வலிவலத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வலிவலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ அரசமரத்தடி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

News image

வலிவலத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Updated On :31 ஆகஸ்ட் 2020, 9:56 am

வலிவலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ அரசமரத்தடி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா, வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட உடையார் குளக்கரையின் மேற்புறம் அமைந்துள்ள ஸ்ரீ அரசமரத்தடி விநாயகர் என்கிற ஸ்ரீ மஞ்சள் விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாக பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கின.

அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையான  இன்று   காலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜையும் 9.10 மணிக்கு பூர்ணாஹூதி யாத்ராதானம், 9. 45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவரான மஞ்சள் விநாயகருக்கு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.