கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: குறைதீர் கூட்டத்திலிருந்து நன்னிலம் விவசாயிகள்  வெளிநடப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து நன்னிலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்புச் செய்து எதிர்ப்பைப்

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: குறைதீர் கூட்டத்திலிருந்து நன்னிலம் விவசாயிகள்  வெளிநடப்பு
Updated On :1 டிசம்பர் 2020, 7:37 am

DIN

நன்னிலம் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து நன்னிலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்புச் செய்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமையில் செவ்வாய்க்கிழமைக் காணொளிக் காட்சி மூலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆங்காங்கே உள்ள வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இணைக்கப்பட்டனர். நன்னிலம் வட்டத்தில் மூங்கில்குடியில் உள்ள விவசாயத்துறை உதவி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துவங்கியவுடன், கூட்ட அரங்கிலிருந்து தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜி.சேதுராமன், நன்னிலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மணிமாறன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மாவை.கணேசன் ஆகியோர் தலைமையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து, அலுவலகம் முன்பு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிட்டனர்.

பின்னர், காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து, மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களை எதிர்த்து நன்னிலத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து முழக்கமிட்ட போது எடுத்த படம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.