மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13 ஆயிரம் செலுத்தி ஏமாந்தவரின் பணம் மீட்பு

குழந்தையின் தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13,000/- செலுத்தி ஏமாந்தவருக்கு , கீழ்பாக்கம் சைபர் கிரைம் உதவியால் வங்கியிலிருந்து பணம் பெற்று தரப்பட்டது.

News image
தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13 ஆயிரம் செலுத்தி ஏமாந்தவரின் பணம் மீட்பு
Updated On :2 டிசம்பர் 2020, 8:46 am

DIN

சென்னை: குழந்தையின் தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13,000/- செலுத்தி ஏமாந்தவருக்கு , கீழ்பாக்கம் சைபர் கிரைம் உதவியால் வங்கியிலிருந்து பணம் பெற்று தரப்பட்டது.

இது குறித்து கீழ்ப்பாக்கம் இணையதளக் குற்றத் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை, செனாய் நகர், அப்பாராவ் தோட்டடத்தைச் சேர்ந்த மணிவண்ணன் தனது குழந்தையை ரோபோடிக் என்ற ஆன்லைன் வகுப்பில் சேர்ப்பதற்காக இணையதளத்தில் தேடி ஒரு நபரை தொடர்பு கொண்ட போது, அவர் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மணிவண்ணன் தனது கனரா வங்கி கணக்கிலிருந்து கூகுள் பே மூலம் ரூ.13,000/- செலுத்தியுள்ளார். பின்னர் அவரது செல்லிடப்பேசி எண்ணை தொடர்பு கொண்ட போது அது தொடர்ச்சியாக அனைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இது குறித்து மணிவண்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் சமீபத்தில் சென்னை பெருநகர காவல் அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்த சைபர் கிரைம் பிரிவின் கீழ்பாக்கம் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்  மு.அதிவீரபாண்டியன் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரை ஏமாற்றி ஆன்லைன் மூலம் பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. உடனே, மேற்படி சைபர் கிரைம் காவல் குழுவினர் இதுகுறித்து கனரா வங்கிக்கும், ரோபோடிக் நிறுவனத்திற்கும் மேற்படி மணிவண்ணன் பணத்தை மீள திருப்பி கொடுக்கும்படி விதிகளுக்குட்பட்டு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.

அதன் பேரில் கனரா வங்கி நிர்வாகத்தினர், மணிவண்ணன் கணக்கிற்கு மேற்படி பணம் ரூ.13,000/-ஐ திரும்ப செலுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த மணிவண்ணன் சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவு கீழ்பாக்கம் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.