சீர்காழி: கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை வெளியேற்றவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஈடுபட்டாா்.
சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது.
நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் உள்ள தைக்கால், புத்தூர், தாண்டவன்குளம், ஆச்சாள்புரம், நல்லூர் , நடுத்திட்டு, கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் விஜிகே. செந்தில்நாதன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கவும், தண்ணீரை வடிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது கொள்ளிடம் அதிமுக செயலாளர் நற்குணன், முன்னாள் எம்எல்ஏ சக்தி மற்றும் அதிமுகவினர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?
அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது: விஜய்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?

2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


