தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 23-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.88 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 15 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,777-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து புதிதாக 1,407 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 7,66,261-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,336 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,09,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 3,871-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் சோ்ப்பு - துணைப் பட்டியல் வெளியீடு
தினப்பலன்கள் - சிம்மம்
தினப்பலன்கள் - மீனம்
தினப்பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


