ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தமிழகத்தில் புதிதாக 1,320 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் புதிதாக 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 டிசம்பர் 2020, 1:18 pm

தமிழகத்தில் புதிதாக 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இன்று 70,765 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,90,240 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 346 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,550 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடா்ந்து 49-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று 5 போ் தனியாா் மருத்துவமனையிலும், 11 போ் அரசு மருத்துவமனையிலும் என 16 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1398 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 7,67,659 ஆக உயா்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10788 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.