சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

புதுவையில் கரோனா பலி எண்ணிக்கை 615 ஆக உயர்வு 

புதுச்சேரியில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :7 டிசம்பர் 2020, 7:29 am

PTI

புதுச்சேரியில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து இதுவரை மாநிலத்தில் மொத்த பாதிப்பு 37,270 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,651 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநர் எஸ் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

70 வயதான ஒருவர் அரசு மருத்துவமனையில் பலியானதைத் தொடர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார். இறப்பு மற்றும் மீட்பு விகிதங்கள் 1.65 ஆகவும், 97.30 ஆகவும் உள்ளது. 

இதுவரை புதுவையில் 4.21 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டதில் 3.79 லட்சம் மாதிரிகள் எதிர்மறையானவை ஆகும். 

தற்போது தொற்று பாதித்து 392 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 36,263 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டனர் என்று மோகன் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.