லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரியபாளையத்தில் தனியார் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்: தொழிலாளர்கள் 100 பேர் கைது

பெரியபாளையம் அருகே ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனியார் நிறுவனத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடமுயன்ற 100 மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
Updated On :16 டிசம்பர் 2020, 8:32 am

DIN

பெரியபாளையம் அருகே ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனியார் நிறுவனத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடமுயன்ற 100 மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மதுரவாசலில்   ஹிந்துஸ்தான் யூனிலிவர்  நிறுவனத்திற்குச் சொந்தமான லின்பாக்ஸ் லாஜிஸ்டிக் தனியார் நிறுவனத்தில் சோப்பு, டீத்தூள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வினியோகம் செய்யும் பணியில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில்
அவர்களை உரிய காரணம் இன்றி பணி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இரண்டாவது முறையாக தங்களது  குடும்பத்தினருடன் வந்து நிறுவன வாயிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஹிந்துஸ்தான் லிவர் பொருள்களை புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தினர்.

பின்னர் தகவலறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த உரிய அனுமதி இல்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 மேற்பட்ட  தொழிலாளர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.