எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டராப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.
கடந்த இரு தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது.
இதனால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கிவரும் உழவர் சந்தை, காலை நேர சிறப்பங்காடி, ராஜாஜி பூங்கா காய்கறி சந்தை, பஜார்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
இப்பகுதியில் மழையால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. மேலும் அதிகாலை நேரத்தில் பெய்த தொடர்மழையால் பால், காய்கறிகள், செய்திதாள் விநியோகம் பாதிப்பிற்குள்ளானது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர்.
காலை நேரத்தில் பெய்த தொடர் கனமழையால், பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர்.
வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மிதமான மழையால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது.
எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை தொடங்கி பெய்துவரும் தொடர்மழையால், இப்பகுதி மகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.
வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால், வெள்ளரிவெள்ளி சாலையில் தேங்கிய மழைநீர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

மாட்டுப் பண்ணையில் தீ விபத்து: 3 மாடுகள் உயிரிழப்பு

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: வைகோ
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


