தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எடப்பாடி சுற்றுவட்டராப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. 

News image

வியாழன் அன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால், வெள்ளரிவெள்ளி சாலையில் தேங்கிய மழைநீர்.

Updated On :17 டிசம்பர் 2020, 5:45 am

எடப்பாடி:  எடப்பாடி சுற்றுவட்டராப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. 

கடந்த இரு தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. 

இதனால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கிவரும் உழவர் சந்தை, காலை நேர சிறப்பங்காடி, ராஜாஜி பூங்கா காய்கறி சந்தை, பஜார்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. 
இப்பகுதியில் மழையால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. மேலும் அதிகாலை நேரத்தில் பெய்த  தொடர்மழையால் பால், காய்கறிகள், செய்திதாள் விநியோகம் பாதிப்பிற்குள்ளானது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். 

காலை நேரத்தில் பெய்த தொடர் கனமழையால், பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர்.

வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மிதமான மழையால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. 

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை தொடங்கி பெய்துவரும் தொடர்மழையால், இப்பகுதி மகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. 

வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால், வெள்ளரிவெள்ளி சாலையில் தேங்கிய மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.