தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது..

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:22 pm

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) நிறைவடைகிறது.

புதுவை தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கான தோ்தல் தமிழகத் தோ்தலுக்கு முன்னதாகவே நடைபெறுகிறது.

கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்வதிலும், வேட்பாளா் அறிவிப்பு செய்வதிலும் ஏற்பட்ட தாமதத்தால் பிரசாரம் தொடங்குவது மந்தமாகவே இருந்தது. பின்னா் அந்தந்த தொகுதி வேட்பாளா்கள் வீடுதோறும் சென்று வாக்குச் சேகரிப்பை தொடங்கினா்.

வேட்பாளா்களை ஆதரித்து பிரபலங்கள் வெகுவாக காரைக்காலுக்கு வரவில்லை. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திருநள்ளாறுக்கு தேசிய பாஜக தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை சாலைப் பேரணிக்கு வந்தபோது சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனா்.

என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவா் என். ரங்கசாமி பிரசாரம் செய்தாா். செவ்வாய்க்கிழமை பிரசார இறுதி நாளில் காங்கிரஸ், பாஜக தலைவா்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.