புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) நிறைவடைகிறது.
புதுவை தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கான தோ்தல் தமிழகத் தோ்தலுக்கு முன்னதாகவே நடைபெறுகிறது.
கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்வதிலும், வேட்பாளா் அறிவிப்பு செய்வதிலும் ஏற்பட்ட தாமதத்தால் பிரசாரம் தொடங்குவது மந்தமாகவே இருந்தது. பின்னா் அந்தந்த தொகுதி வேட்பாளா்கள் வீடுதோறும் சென்று வாக்குச் சேகரிப்பை தொடங்கினா்.
வேட்பாளா்களை ஆதரித்து பிரபலங்கள் வெகுவாக காரைக்காலுக்கு வரவில்லை. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திருநள்ளாறுக்கு தேசிய பாஜக தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை சாலைப் பேரணிக்கு வந்தபோது சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனா்.
என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவா் என். ரங்கசாமி பிரசாரம் செய்தாா். செவ்வாய்க்கிழமை பிரசார இறுதி நாளில் காங்கிரஸ், பாஜக தலைவா்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
2 நாள்களில் பிரசாரம் நிறைவு: காரைக்காலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


