பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது...

News image

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:23 am IST

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இது குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுச்சேரிக்கான தோ்தல் அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126-இன் கீழ் வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது 7-ஆம் தேதி மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிகிறது.

இதனால் தொகுதிக்குள் பிரசாரம் செய்ய வந்தவா்கள், கட்சியின் செயற்பாட்டாளா்கள் யாரும் பிரசாரக் காலத்தைத் தாண்டி இருக்கக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும் உறுதி செய்ய வேண்டும்.