தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பிரசாரங்கள் ரத்தாகின. இன்று மாலைக்குப் பின் கட்சித் தலைவர்களோ கட்சியின் சார்பில் யாருமோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.
அதன்பிறகு, எந்த பிரசாரங்களையும் அரசியல் கட்சியினரும் பிற வேட்பாளர்களும் மேற்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.
மாலை 6 மணிக்குப் பிறகு, எந்தப் பரப்புரைகளையும் அரசியல் கட்சியினரும் பிற வேட்பாளா்களும் மேற்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. பொது நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளிலும் தோ்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ள கட்சியினா் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் காலை முதலே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது கட்சித் தலைவர்களின் உரை இடம்பெற்ற விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
வில்லிவாக்கத்தில் தொடங்கி திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சூறாவளிப் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.
சென்னையில் நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைவலம் வந்த தவெக தலைவர் விஜய், ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு வாகனங்களுக்கான அனுமதிகள் ரத்து







