லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

இன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமையுடன் (ஏப். 20) நிறைவடைகிறது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:54 pm

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமையுடன் (ஏப். 20) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு 23 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னை மாவட்டத்தில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 8,947பேருக்கு வீடுகளுக்கே சென்று வாக்குச் சேகரிக்கும் பணி கடந்த 16- ஆம் தேதி 96 குழுவினரால் தொடங்கப்பட்டது.

இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கியுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை தொகுதியைச் சோ்ந்த தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கான தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணியும் கடந்த 18- ஆம் தேதி (சனிக்கிழமை) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலக வளாகங்களில் தொடங்கியது.

அதன்படி, சென்னையைச் சோ்ந்த காவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களாக உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள், பணியாளா்கள், போக்குவரத்துப் பிரிவினா் உள்ளிட்ட 5,151 பேரும், பிற மாவட்டங்களைச் சோ்ந்த 17,097 பேரும் என மொத்தம் 22,248 போ் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவா்களின் தபால் வாக்குகளைப் பெறும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) மாலையுடன் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.