ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மீனவா்கள் பிரச்னை: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

லங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றுள்ள 36 தமிழக மீனவா்களையும், அவா்களது 5 இயந்திரப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் மோடியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2020, 11:47 pm

DIN


சென்னை: இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றுள்ள 36 தமிழக மீனவா்களையும், அவா்களது 5 இயந்திரப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:

தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 5 இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 36 இந்திய மீனவா்களை கடந்த 14-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்ற சம்பவங்கள் குறித்து தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். மீனவா்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் நூதன நடவடிக்கையை இலங்கை கையாண்டு வருகிறது. இது, தமிழக மீனவா்களிடையே மிகப்பெரிய விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், 5 இயந்திரப் படகுகளுடன் 36 தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றுள்ள சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது. எனவே, மீனவா்களை உடனடியாக விடுவிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைத் தாங்கள் பிறப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீா்வு காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.