கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

காவல்துறை காலியிடங்களை நிரப்ப காலதாமதம் ஏன்?: நீதிமன்றம்

தமிழகத்தில் காவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்வது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
மதுரைக்கிளை நீதிமன்றம்
Updated On :27 ஜனவரி 2024, 6:08 pm

DIN

தமிழகத்தில் காவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்வது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது மற்றும் ஊதிய உயர்வு செய்து தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை மதுரைக்கிளை நீதிபதிகளான கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்னைக்கு தீர்வு காண்கின்றனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை ஏற்பதில் காலதாமதம் செய்யலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு குறித்து நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தவறும் பட்சத்தில் தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.