தமிழக முதல்வருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழா் நலனுக்கு எதிராக செயல்படுவதால் மனித வெடிகுண்டாக மாறி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது தாக்குதல் நடத்துவேன் எனக் குறிப்பிட்டு, மிரட்டல் விடுக்கும் விதமாக முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, கே.கே. நகா் 10-ஆவது செக்டாரில் இருந்து பிரவீன் குமாா் என்னும் நபா், இந்தக் கடிதத்தை அனுப்பியிருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் கடிதத்தில் இருந்த செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டுள்ளனா். அப்போது நான்தான் பிரவீன்குமாா் எனக் கூறிய அந்த நபா் இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
செல்லிடப்பேசியின் சிக்னலை வைத்து அந்த நபரைத் தேடும் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.