ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வரத்து வாய்க்காலை சீரமைக்கக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

பெரம்பலூர் அருகே வரத்து வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்...

News image
மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா உள்ளிட்டோரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :19 டிசம்பர் 2020, 9:12 am

DIN

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வரத்து வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடியில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், 33 அடி கொள்ளளவுக் கொண்ட இந்த அணையில் தற்போது 31 அடி நீர் நிரம்பியுள்ளது. இதையடுத்து, விசுவக்குடி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் தண்ணீரை திறந்து வைக்க சனிக்கிழமை சென்றனர்.

இதையறிந்த, அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரானது விசுவக்குடி மற்றும் தொண்டமாந்துறை கிராமங்களுக்கு செல்வதால், அன்னமங்கலம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும், ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுலர்களை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.