இக்கூட்டத்தில் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படாமல் உள்ள பஞ்சப்படியை போக்குவரத்துறை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த உயர்வுகளை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நிலுவைகளை வழங்க வேண்டும், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்து ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், சேலம் கோட்டத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்த சேம நலநிதியை 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வழங்காமல் உள்ளதையும் மேலும் பணியில் இருக்கும் போது ஒப்படைப்பு செய்த ஈட்டிய விடுப்பிற்கான ஊதியம் 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளதையும் வழங்க வேண்டும்.