உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் நெல் அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து மதுரையைச் சேர்ந்த கிளீனர் பலியானார்.
சின்னமனூர் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து நெல் அறுவடை இயந்திரங்கள் மதுரை, வேலூர், தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் முகாமிட்டுள்ளனர்.
அதன்படி சின்னமனூர் உத்தமபாளையம் இடையே இல்ல வேம்படி களம் அருகே நெல் அறுவடை செய்யும்போது வயலில் குறுக்கே சென்ற உயர் மின்சார வயர் வாகனத்தில் உரசியது. இதில் வாகனத்தில் வேலை செய்து கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த நாகார்ஜுன்(20) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலைக் கைப்பற்றி சின்னமனூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரானால் அச்சுறுத்தல் இல்லை! போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமா

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி ஸ்டில்ஸ்

திருமண மண்டபங்கள், தனியாா் நிதி நிறுவனங்கள், அச்சக உரிமையாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

