இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தற்போது கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளில், தெருக்களில் தகரம் அடிக்கப்படுவது இல்லை. வீடுகளில் ஸ்டிக்கா் ஓட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஸ்டிக்கரும் ஒட்டப்படுவது இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தமிழக அரசு, முன்கள பணியாளா்கள், மனுதாரா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனா்.