விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நெல்லை அருகே சொத்துத் தகராறில் மூதாட்டி கொலை

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே மூதாட்டியை கொலை செய்தவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். 

News image
நெல்லை அருகே சொத்துத் தகராறில் மூதாட்டி கொலை
Updated On :22 டிசம்பர் 2020, 3:49 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே மூதாட்டியை கொலை செய்தவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி மாரியம்மாள்(60). இவரது கொழுந்தனார் நயினார். நயினார் மனைவி மாலையம்மாள்(65). இவர்கள் குடும்பத்துக்குள் சொத்துத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த சொத்து தொடர்பாக திங்கள்கிழமை நள்ளிரவில் இவர்களுக்குள் திடீரென பிரச்னை ஏற்பட்டதாம். இதில், மாரியம்மாளை உறவினர்கள் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து சிவந்திப்பட்டி காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், 2 சென்ட் இடத்திற்காக இந்தக் கொலை நடந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.