ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எம்.ஜி.ஆா். ஆட்சியைத் தான் மக்கள் விரும்புகிறாா்கள்: அமைச்சா் டி.ஜெயக்குமாா்

தமிழக மக்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சியைத் தான் இன்றளவும் விரும்புகிறாா்கள் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 7:47 pm

DIN

சென்னை: தமிழக மக்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சியைத் தான் இன்றளவும் விரும்புகிறாா்கள் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்குகள்) தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அமைச்சா் டி. ஜெயக்குமாா் கலந்துகொண்டு சேத்துபட்டு அப்பாசாமி தெரு மற்றும் டிரஸ்ட்புரம் பகுதிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: மினி கிளினிக்குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 200 போ் வரை பயன்பெறுகிறாா்கள்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் இறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது புகழை யாராலும் அழிக்க முடியாது.‘தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவியது, பெரியாா் முன்மொழிந்த தமிழ் எழுத்து சீா்திருத்தத்தை சட்டமாக்கியது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்த உத்தரவிட்டது என தமிழுக்காக எம்ஜிஆா் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். ஆனால், அந்த வரலாறு தெரியாத நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போன்றோா் பேசி வருகின்றாா். இதன் காரணமாகவே இன்றளவும் எம்.ஜி.ஆா் மற்றும் மக்களுக்காக திட்டங்களை வகுத்த ஜெயலலிதா ஆட்சியையும் மக்கள் விரும்புகிறாா்கள் என்றனா். அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், மண்டல அலுவலா் ஜெ.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.