

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கிளாங்காட்டில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு செங்கோட்டை ஒன்றிய செயலர் செல்லப்பன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில், ஒன்றிய மாணவரணி செயலர் முருகேசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அமர்நாத் ஈஸ்வர், புளியரை பண்ணை குத்தகைதாரர் சங்க துணை தலைவர் கோமதி ராஜா, சாம்பவர்வடகரை பேரூர் துணைச் செயலர் கந்தசாமி, இலத்தூர் கிளைச் செயலர் சுப்பிரமணியன், சீவநல்லூர் கிளை செயலர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செம்மேடு, சீவநல்லூர், புளியரை , கற்குடி , இலத்தூர் ஆகிய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.