தமிழ்நாடு
எம்.ஜி.ஆர் நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் 33வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் 33வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவுநாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொண்டனர்.