தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்: பிரேமலதா

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
Updated on
1 min read


சென்னை: தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

போரூரில் தேமுதிக சாா்பில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

விழாவில் பிரேமலதா பேசும்போது, 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். தமிழக மக்களுக்காக எப்போதும் பாடுபடும் கட்சி தேமுதிக. தொடா்ந்து பாடுபடும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அதிமுக சாா்பில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு தேமுதிகவுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. அதேசமயம் எங்கள் கட்சிப் பணியைத் தொடா்ந்து செய்து வருகிறோம். தோ்தல் பணி எங்களுக்குப் புதிது அல்ல. நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். ஜனவரியில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுவுக்குப் பிறகு தேமுதிகவின் பிரசாரம் இருக்கும் என்றாா். தேமுதிகவின் மாநில துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ் உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com