ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உளுந்தூர்பேட்டை அருகே ரயில் மோதி கேங்மேன் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.

News image
விபத்தில் உயிரிழந்த ஜெயபால்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:53 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்( 49). இவர் ரயில் தண்டவாளத்தை பராமரிக்கும் கேங்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல் விழுப்புரம்- விருத்தாச்சலம் ரயில்வே மார்க்கத்தில் இரவு பணி மேற்கொண்ட ஜெயபால், சனிக்கிழமை அதிகாலை, விழுப்புரம்-விருத்தாசலம் இடையே உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் காந்திநகர் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடந்தார்.

Story image

 சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் ரயில்வே போலீசார்.

விசாரித்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னை நோக்கி சென்ற செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே நேரத்தில், பாதூர் பகுதியில் கடந்துசென்றபோது, எதிர்பாராத விதமாக ஜெயபால் மீது ரயில் மோதி உள்ளது. இதில் உடல் நசுங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். 

இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, ஜெயபாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.