

திண்டுக்கல் சைனடி ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாக்கியப் பஞ்சாங்கப்பட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி திண்டுக்கல் சைனடி ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம், மகா சங்கல்பம், அனுக்ஞ, பூஜை, தேவ பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சனிப் பெயர்ச்சி யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சார் சுகன்யா, சிவாச்சாரியார் கைலாசம் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.