

சூலூர் அருகே கணியூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் கணியூர் அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது. சுங்கச்சாவடி கட்டண பிரச்னை சம்பந்தமாக அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சுங்கச்சாவடியில் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அறிக்கையின்படி பாஸ்டேக் உள்ள வண்டிகளை மட்டுமே அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கணியூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள கணியூர் கருமத்தம்பட்டி நீலம்பூர் சூலூர் செம்மாண்டம் பாளையம் சோமனூர் உள்ளிட்ட பகுதிகள் வசிக்கும் பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் சாலையைக் கடக்க அதிக தொகை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இதனைப் போக்க உடனடியாக அந்தந்த ஊர்களின் அருகில் அணுகு சாலை அமைத்துத் தர வேண்டும். இல்லை எனில் சுங்கச்சாவடியை ஊர்களின் அருகில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.
மேலும் பாலங்களின் அருகே போதிய மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் சாலையைக் கடக்கும் போது அந்த வழிகளில் உரிய சமிக்கைகள் பொருத்தப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளைச் சட்டப்பேரவை உறுப்பினர் முன்வைத்தார். மேலும் இது சம்பந்தமாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் பொதுமக்கள் சார்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளைக் கோரிக்கை மனுவாக அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.