

சென்னை: தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாளை துவங்கி வரும் 31-ஆம் தேதி வரை ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட உள்ளேன்.
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனை ஏற்பதில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடும் கூட.
நடிப்பில் வேண்டுமானால் கமல் பெரியவராக இருக்காலம். ஆனால் அரசியலில் அவர் ஜீரோதான்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.