

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ளஅருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. 
 அருள்மிகு சென்றாயப்பெருமாள் மூலவர் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு  சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.