தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.