கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சியினர்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள அரண்மனை குளத்திற்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:58 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள அரண்மனை குளத்திற்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. 

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ரவி பாலன் கூறியதாவது:

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பேகம்பூர் பகுதியில்  மதுரை சாலையில் உள்ள அரண்மனை குளம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில் மாநகராட்சி நிர்வாகம் ஆஜராகவில்லை.

இதன் காரணமாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. அந்த தீர்ப்பை ரத்து செய்வதற்கு அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படாத நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் நிதி திரட்டி மேல்முறையீட்டு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.