47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீலகிரியில் யானைகள் நடமாட்டம்: இரவு நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

நீலகிரியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News image
நீலகிரியில் யானைகள் நடமாட்டம்: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை
Updated On :5 ஜூலை 2020, 10:41 am

DIN

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை, பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழ சீசன் நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம்   குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில்  கொலக்கம்பை, தூதூர்மட்டம், பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது .

இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், பொது ஊரடங்கின் காரணமாக மலைக்கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேராமல் பாதுகாப்புடன் இருக்க என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.