சென்னை: தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முயற்சி இன்று தொடங்கியது.
கரோனா வைரஸை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து தன்னார்வலர்கள் இருவருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்.. சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் இரண்டு பேருக்கு 0.5 என்ற அளவில் இந்த மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவிக்குமார் கூறுகையில், கோவாக்சின் மருந்து பரிசோதனையானது 6 மாதங்கள் வரை நடக்கும். அதே சமயம், கோவாக்சின் மருந்தின் செயல்பாடு வரும் 3 மாதங்களில் சரியாக தெரியவரும். பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும்பட்சத்தில், மருந்தை விரைவல் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா
கரோனா தடுப்பூசியான கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.