லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா 

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா
லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா


மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது கமல்நாத் தலைமையிலான 15 மாத கால ஆட்சியைக் கவிழ்க்க பேருதவி செய்தவர்களில் இந்த அமைச்சரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே  நேற்று முதல்வர் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சருடன் பல்வேறு துறை அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

இவர் செவ்வாய்க்கிழமை லக்னௌவில் நடைபெற்ற மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்றிருந்தார். 

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே 4 பாஜக எம்எல்ஏக்கள், 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பல முன்னாள் அமைச்சர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபாலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 4900 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் கரோனாவுக்கு 149 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com