நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

மிகக் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று, திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

News image

புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு! - கோப்பிலிருந்து...

Updated On :25 ஏப்ரல் 2026, 12:30 pm IST

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெறும்பூர் தொகுதி, தொடர்ச்சியாக நான்காவது முறை, மிகக் குறைந்த வாக்குப்பதிவுகளுடன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்துக்குள் அமைந்துள்ள ஒன்பது தொகுதிகளில் திருவெறும்பூர் மட்டும் எப்போதும் குறைந்த வாக்குப்பதிவுகளுடன் தேர்தலை நிறைவு செய்து வருகிறது.

இங்குள்ள இளம் தலைமுறையினர் அனைவரும் வெளிநாடுகளில் படித்து, வேலை செய்து வருவதாலும், வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு அதிகமானவோர் வாழ்ந்து வருவதாலும், தொடர்ச்சியாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு 67 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு, 2026 தேர்தலில் 81 சதவிகிதமாக உயர்ந்திருந்தாலும் மற்ற தொகுதிகளைக் காட்டிலும் திருவெறும்பூரில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

நகரங்கள், கிராமங்கள் என எண்ணிக்கையில் சமமாகக் கொண்ட திருவெறும்பூரில் நகரப் பகுதிகளில் தேர்தல் களைகட்டவில்லை.

மேலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தேர்தல் நாளன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட பலரும் வாக்குப்பதிவு நேரத்துக்குள் சொந்த ஊர் செல்ல முடியாமல் நேர்ந்ததாகவும், அதனால் குறிப்பிட்ட வாக்குசதவிகிதம் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.