சேலம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் சங்ககிரியில் ஆர்ப்பாட்டம்
சேலம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரியில் மாவட்டச் செயலர் ந.மகேந்திரவர்மன் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சேலம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரியில் மாவட்ட செயலர் ந.மகேந்திரவர்மன் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு சங்ககிரி மதிமுக நகர அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.
சங்ககிரி மேற்கு மதிமுக தொழிற்சங்கத் தலைவர் இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.சங்கர், சங்ககிரி நகரச் செயலர் எம்.கதிர்வேல்,பொறியாளர் சுரேஷ்குமார், மகளிரணி நிர்வாகி விஜயா, நிர்வாகிகள் தங்கவேல், சுகவனம், அண்ணாதுரை, கந்தசாமி, பழனிசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், மாநில உரிமைகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடாது, நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், சேலத்தில் எட்டு வழிச்சாலையை விவசாய நிலங்களில் அமைக்கக் கூடாது, மின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...