47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூரில் எஸ்டியூ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் எஸ்டியூ(சுதந்திர தொழிலாளர் யூனியன்) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2020, 9:07 am

DIN

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் எஸ்டியூ(சுதந்திர தொழிலாளர் யூனியன்) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொழிலாளர் அமைப்பான எஸ்டியூ சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பக்கீர் முகமது பாபு தலைமை வகித்தார். 

இதில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் தாஹிர் அலி, மாநிலத் துணைத் தலைவர் மார்க்கெட் ஜெயிலாபுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.